search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெலட்டின் குச்சிகளுடன் கூடிய மர்ம பார்சல் பறிமுதல்
    X

    ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெலட்டின் குச்சிகளுடன் கூடிய மர்ம பார்சல் பறிமுதல்

    ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ஜெலட்டின் குச்சிகளுடன் கூடிய மர்ம பார்சல் ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
    மும்பை: 

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோக்மன்யா திலக் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மப்பொருள் இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் அந்த மர்மபார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 



    அந்த பார்சலில் 5 ஜெலட்டின் குச்சிகளும் ஒரு கடிதமும் இருந்தது. இந்த பார்சலை ரெயிலில் விட்டுச்சென்றது யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக ஜெலட்டின் குச்சிகள் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×