என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் கடும் வறட்சி- தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்
Byமாலை மலர்4 Jun 2019 9:39 AM GMT (Updated: 4 Jun 2019 9:39 AM GMT)
ராஜஸ்தானில் உள்ள பரஸ்ரம்புரா கிராமத்தில் நீர் திருட்டை தடுக்க மக்கள் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர்.
பில்வாரா:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் தண்ணீர் திருட்டை தடுக்க ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்து மக்கள் தண்ணீரை பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரை அப்பகுதி மக்கள் கேன்களில் சேகரித்து எஞ்சியுள்ள 10 நாட்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரை சிலர் திருடிச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு நீரை பாதுகாத்து வருகின்றனர். தங்கம், வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருளாக உள்ளது என்பதால் அதனை பத்திரமாக பூட்டி பாதுகாத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், “பரஸ்ரம்புரா கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் தண்ணீர் திருட்டை தடுக்க ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்து மக்கள் தண்ணீரை பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரை அப்பகுதி மக்கள் கேன்களில் சேகரித்து எஞ்சியுள்ள 10 நாட்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரை சிலர் திருடிச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு நீரை பாதுகாத்து வருகின்றனர். தங்கம், வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருளாக உள்ளது என்பதால் அதனை பத்திரமாக பூட்டி பாதுகாத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், “பரஸ்ரம்புரா கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X