search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமல்படுத்த 10 நாள் தடை - சுப்ரீம் கோர்ட்
    X

    புதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமல்படுத்த 10 நாள் தடை - சுப்ரீம் கோர்ட்

    புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த 10 நாள் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை 10 நாளுக்கு அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள உத்தரவு குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×