search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரம்
    X

    மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரம்

    13 பேருடன் சென்று மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

    மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானம் எங்கு உள்ளது? அதன் நிலை என்ன? என்பது பற்றி கண்டறிய முடியாததால் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×