என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை கூட்டத்தொடர் 20–ந் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்3 Jun 2019 7:15 PM GMT (Updated: 3 Jun 2019 7:15 PM GMT)
மாநிலங்களவை கூட்டத்தொடர் 20–ந் தேதி தொடங்கி ஜூலை 26–ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் வருகிற 17–ந் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19–ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20–ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26–ந் தேதி கூட்டத்தொடர் முடிகிறது.
இப்போது பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரை வருகிற 20–ந் தேதி தொடங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக்வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உடனடியாக கவனிக்க வேண்டிய அரசு அலுவல்கள் காரணமாக மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 20–ந் தேதி தொடங்கி ஜூலை 26–ந் தேதி முடிவடைகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X