என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்பில் சிறுமியை கற்பழித்தவர் அடித்துக்கொலை
Byமாலை மலர்3 Jun 2019 5:33 AM GMT (Updated: 3 Jun 2019 5:33 AM GMT)
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 11 வயது சிறுமியை கற்பழித்தவனை பொதுமக்கள் சரமாரியாக அடித்தனர். இதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஜலந்தர்:
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ராம மாண்டி பகுதியில் 39 வயது வாலிபர் ஒருவர் தங்கியிருந்தார். இவரது வீட்டின் அருகே நேபாளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கியிருந்தது.
நேபாள தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களது 11 வயது மகள் மட்டும் தனியாக இருந்தாள். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் நேபாள தம்பதியின் வீட்டுக்குள் புகுந்தார்.
அங்கு தனியாக இருந்த சிறுமியை கற்பழித்தார். இதனால் அவளது உடல் நிலை மோசம் அடைந்தது. இதற்கிடையே சிறுமி கற்பழிக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர்.
வீட்டில் இருந்த வாலிபரை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இருந்தும் போக்சோ சட்டத்தின் கீழ் கொல்லப்பட்ட வாலிபர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அவரை அடித்துக் கொன்ற கும்பல் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் கும்பலால் தாக்கப்பட்ட வாலிபரின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கும்பலால் தாக்கப்பட்ட வாலிபருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து 2 போலீசார் அவரை வேனுக்கு அழைத்து செல்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ராம மாண்டி பகுதியில் 39 வயது வாலிபர் ஒருவர் தங்கியிருந்தார். இவரது வீட்டின் அருகே நேபாளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கியிருந்தது.
நேபாள தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களது 11 வயது மகள் மட்டும் தனியாக இருந்தாள். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் நேபாள தம்பதியின் வீட்டுக்குள் புகுந்தார்.
அங்கு தனியாக இருந்த சிறுமியை கற்பழித்தார். இதனால் அவளது உடல் நிலை மோசம் அடைந்தது. இதற்கிடையே சிறுமி கற்பழிக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர்.
வீட்டில் இருந்த வாலிபரை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இருந்தும் போக்சோ சட்டத்தின் கீழ் கொல்லப்பட்ட வாலிபர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அவரை அடித்துக் கொன்ற கும்பல் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் கும்பலால் தாக்கப்பட்ட வாலிபரின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கும்பலால் தாக்கப்பட்ட வாலிபருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து 2 போலீசார் அவரை வேனுக்கு அழைத்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X