search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
    X

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

    சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
     
    இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடைவிதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது.

    இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்று விசாரிக்க வேண்டும் என பா.ம.க. சார்பில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×