search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்
    X

    ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
    அமராவதி: 

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ஆந்திரா மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவ்ர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×