search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் - குல்காம் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீர் - குல்காம் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை கண்டதும் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

    அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×