search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே மாதத்துக்குள் 2 டிஎம்சி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் - காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை
    X

    மே மாதத்துக்குள் 2 டிஎம்சி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் - காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை

    டெல்லியில் இன்று தொடங்கிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மே மாதத்துக்குள் 2 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன. 

    காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது.



    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், மேகதாது விவகாரம் குறித்த நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும். இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியது.

    மேலும், மே மாதத்துக்குள் 2 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் எனவும், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 9.2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு விடுவிக்க ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
    Next Story
    ×