search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி கொடுத்த ராஜினாமா கடிதம்- காங்கிரஸ் ஏற்க மறுப்பு
    X

    ராகுல் காந்தி கொடுத்த ராஜினாமா கடிதம்- காங்கிரஸ் ஏற்க மறுப்பு

    இன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுக்கவே, காங்கிரஸ் அதனை ஏற்க மறுத்துள்ளது.
    புது டெல்லி:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

    பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

    இதையடுத்து மாநில தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.  காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்துள்ளது. 
    Next Story
    ×