என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது- நடிகை ரோஜா
Byமாலை மலர்25 May 2019 5:35 AM GMT (Updated: 25 May 2019 5:52 AM GMT)
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
நகரி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X