search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு
    X

    சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு

    சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். அதன்படி நீதிபதிகளாக ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



    இந்நிலையில், புதிய நீதிபதிகள் 4 பேரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் முன்னர் 27 பேராக இருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×