என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.: மெயின்புரியில் முலாயம் சிங்கும், அசம்காரில் அகிலேஷ் யாதவும் வெற்றி
Byமாலை மலர்23 May 2019 8:29 PM GMT (Updated: 23 May 2019 8:29 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X