search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி சிவசேனாவில் இணைந்தார்
    X

    மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி சிவசேனாவில் இணைந்தார்

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களுக்கும் ஷிர்சாகருக்கும் சமீபகாலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.



    இந்நிலையில், மும்பையில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார். தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷிர்சாகர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×