search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு
    X

    உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

    உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது.

    நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.



    இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது.

    இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. 
    Next Story
    ×