search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் செயின் பறிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - ஜனாதிபதி ஒப்புதல்
    X

    குஜராத்தில் செயின் பறிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - ஜனாதிபதி ஒப்புதல்

    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு 379 சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, செயின் பறிப்பில் ஈடுபடுவதை குறைக்கும் வகையில் தண்டனையை கடுமையாக்க மாநில அரசு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

    அதன்படி, செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு இனி 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.



    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த புதிய சட்டத்தின்படி செயின் பறிப்பில் ஈடுபட முயன்று சிக்கும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 5 ஆண்டும், அதிகபட்சமாக 7 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×