search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை- ராகுல்காந்தி பேட்டி
    X

    கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை- ராகுல்காந்தி பேட்டி

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே உள்ளது. அதனால்தான் மோடியின் பிரசாரம் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. அரசியல் ரீதியாக நான் அன்பையே வெளிப்படுத்துகிறேன்.

    23-ந் தேதி மக்கள் முடிவு என்ன என்பது தெரிந்து விடும். அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி இருக்காது என்று நினைக்கிறேன்.

    தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அது பற்றி சொல்வது சரியாக இருக்காது. பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.சின் தவறான கொள்கைகளை வீழ்த்துவதும் தான் எனது இலக்காகும்.

    இந்த தேர்தலில் மோடி நிச்சயமாக தோல்வி அடைவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோடியால் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. மோடி மீது உள்ள பரவலான அதிருப்தி அவரை கண்டிப்பாக வீழ்த்தும்.

    தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகுதான் புதிய ஆட்சி பற்றி தெளிவாக தெரிய வரும். எனவே அது பற்றி இப்போதே பதில் சொல்வது சரியாக இருக்காது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.

    மக்களின் விருப்பம் என்ன என்பது 23-ந் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்களின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம். அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் பொருளாதார கொள்கையை சீரமைப்போம். மோடியின் ஆணவத்தால் நமது நாட்டின் பொருளாதாரம் சிதைந்து விட்டது.

    பொருளாதார கொள்கைகளை மோடி செயல்படுத்தும் முன்பு மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்போம்.


    மோடி அரசு, அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதால் தான் நாங்கள் முழு மூச்சாக எதிர்க்கிறோம். மக்களின் குரலுக்கு இந்த அரசு மதிப்பு அளிப்பது இல்லை. எனவேதான் மோடிஅரசை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    Next Story
    ×