search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது - ராகுல் காந்தி தாக்கு
    X

    மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது - ராகுல் காந்தி தாக்கு

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை வருகிற மே 23-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதார்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளன.


    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்டது, எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது.

    தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Next Story
    ×