search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு - நாட்டின் 542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
    X

    இன்று 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு - நாட்டின் 542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இறுதிக்கட்டமாக எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று  நடைபெற்ற வாக்குப்பதிவு 6 மணியுடன் முடிவடைந்தது. 

    இன்றைய தேர்தலில் அதிகபட்சமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் 73.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

    அதற்கு அடுத்தபடியாக, ஜார்கண்ட் மாநிலத்தில்70.05 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 69.38 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 66.18 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 63.57 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 58.81 சதவீதம் வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 54.37 சதவீதம் வாக்குகளும், மிகவும் குறைந்தபட்சமாக பீகாரில் 49.92சதவீதம் வாக்குகளும் பதிவாகின.  

    மேற்கண்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 60.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில், இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்ததாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இன்றைய தேர்தலில் 3.47 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 3,377 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட  7.27 கோடி பேர் வாக்களித்ததாக  தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×