search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்
    X

    சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, சீக்கியர்கள் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.  

    சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.



    அவர் தனது பதிவில், “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என் தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம். 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். 
    Next Story
    ×