search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வான்வழி விதிமுறைகளை மீறிய ஜார்ஜியா விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்
    X

    வான்வழி விதிமுறைகளை மீறிய ஜார்ஜியா விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்

    வான்வழி விதிமுறைகளை மீறி பறந்த ஜார்ஜியா விமானப்படை சரக்கு விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    வான்வழி விதிமுறைகளை மீறி பறந்த ஜார்ஜியா நாட்டு விமானப்படை சரக்கு விமானம், ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம், ஜார்ஜியா நாட்டின் திபிலிசியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வழியாக டெல்லிக்கு வருவதற்கு அனுமதி பெற்றிருந்தது.

    ஆனால், திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி, வடக்கு குஜராத் வழியாக இந்திய வான் பகுதிக்குள் நுழைந்தது. இதைக் கண்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிர்ச்சி அடைந்தன. அது, ஜார்ஜியா விமானம் என்பதை கண்டறிந்தன. 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவ்விமானத்தை இந்திய விமானப்படை விமானம் வழிமறித்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான தளத்தில் அவசரமாக தரை இறங்க வைத்தது. அங்கு ஜார்ஜியா விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதுகுறித்து இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் அனுபம் பானர்ஜி கூறியதாவது:-

    ஜார்ஜியா விமானம், அங்கீகரிக்கப்பட்ட விமான போக்குவரத்து பாதையை பின்பற்றவில்லை. ரேடியோ சாதனங்கள் மூலம் கட்டளையிட்டும் பதில் அளிக்கவில்லை. ஆபத்துகால அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை. சிக்னல் கொடுத்தும் கீழ்ப்படியவில்லை. எனவே, அந்த வான்வழி பாதையை மூடிவிட்டு, விமானத்தை வழிமறித்தோம். அதன்பிறகுதான் உரிய பதில் அளித்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் சந்தேகிக்கும் படியான பொருள் எதுவும் இல்லை என்றும், எனவே அந்த விமானம் தொடர்ந்து பறந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் பின்னர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×