என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகள்- கொலிஜியம் பரிந்துரை
Byமாலை மலர்9 May 2019 5:53 AM GMT (Updated: 9 May 2019 7:33 AM GMT)
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடத்துக்கு நியமிக்கப்பட வேண்டிய நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. #SupremeCourtCollegium #Collegium
புதுடெல்லி:
அவ்வகையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மேலும் 2 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொலிஜியம், தனது புதிய பரிந்துரை கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கூறியுள்ளது.
நீதிபதி கபாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகயும், நீதிபதி சூரிய காந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
திறமை மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கொலிஜியம் கூறியிருக்கிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் எஸ்சி, எஸ்டி., பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை கவனத்தில் கொண்டு, நீதிபதி கவாய்க்கு பதவி உயர்வு வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி அனிருத்தா போஸ் தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே, பரிந்துரைத்த இந்த நீதிபதிகளை மீண்டும் பரிந்துரை செய்திருப்பதால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பரிந்துரைகளும் மத்திய அரசால் ஏற்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் காலியிடம் முழுமையாக நிரப்பப்பட்டு விடும். #SupremeCourtCollegium #Collegium
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். 4 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்ய வேண்டும்.
அனிருத்தா போஸ் - ஏ.எஸ்.போபண்ணா
அவ்வகையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மேலும் 2 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொலிஜியம், தனது புதிய பரிந்துரை கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கூறியுள்ளது.
நீதிபதி கபாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகயும், நீதிபதி சூரிய காந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
திறமை மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கொலிஜியம் கூறியிருக்கிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் எஸ்சி, எஸ்டி., பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை கவனத்தில் கொண்டு, நீதிபதி கவாய்க்கு பதவி உயர்வு வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி அனிருத்தா போஸ் தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே, பரிந்துரைத்த இந்த நீதிபதிகளை மீண்டும் பரிந்துரை செய்திருப்பதால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பரிந்துரைகளும் மத்திய அரசால் ஏற்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் காலியிடம் முழுமையாக நிரப்பப்பட்டு விடும். #SupremeCourtCollegium #Collegium
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X