என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க சுஷ்மா நடவடிக்கை
Byமாலை மலர்7 May 2019 9:42 AM GMT (Updated: 7 May 2019 11:11 AM GMT)
இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்கள் நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். #Indiansailors #Indiansailorsabducted #SushmaSwaraj
புதுடெல்லி:
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அந்நாட்டு கடல் பகுதியை வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் கடந்து செல்லும்போது கப்பலுடன் அதில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களை சிறைபிடித்து விடுகின்றனர்.
அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்கள் நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட செய்திகள் சமீபத்தில் வெளியாகின.
இந்நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நைஜீரியாவில் உள்ள இந்திய தலைமை தூதரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார். நைஜீரியா நாட்டு அரசின் உயரதிகாரிகளுடன் இதுதொடர்பாக உடனடியாக தொடர்புகொண்டு, பிடிபட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன? என்பது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு நைஜீரியாவுக்கான இந்திய தலைமை தூதர் அபய் தாக்குர்-ஐ அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #Indiansailors #Indiansailorsabducted #SushmaSwaraj
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அந்நாட்டு கடல் பகுதியை வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் கடந்து செல்லும்போது கப்பலுடன் அதில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களை சிறைபிடித்து விடுகின்றனர்.
அவர்களை பணயக் கைதியாக பயன்படுத்தி பணம் பறித்து அதை ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். கேட்ட தொகை கிடைக்காதபட்சத்தில் பிடிபட்ட சிலரை பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி கொன்று விடுவதும் உண்டு.
அவ்வகையில், இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்கள் நைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட செய்திகள் சமீபத்தில் வெளியாகின.
இந்நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நைஜீரியாவில் உள்ள இந்திய தலைமை தூதரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார். நைஜீரியா நாட்டு அரசின் உயரதிகாரிகளுடன் இதுதொடர்பாக உடனடியாக தொடர்புகொண்டு, பிடிபட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன? என்பது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு நைஜீரியாவுக்கான இந்திய தலைமை தூதர் அபய் தாக்குர்-ஐ அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #Indiansailors #Indiansailorsabducted #SushmaSwaraj
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X