என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமேதி தொகுதியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் வினியோகம் - பிரியங்கா புகார்
Byமாலை மலர்4 May 2019 10:37 PM GMT (Updated: 4 May 2019 10:37 PM GMT)
அமேதி தொகுதியில் பா.ஜனதா வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரியங்கா காந்தி புகார் தெரிவித்துள்ளார். #Amethi #PriyankaGandhi #BJP
அமேதி:
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் போட்டியிடுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.
அந்த தொகுதியில் உள்ள பிரதான்ஸ் கிராமத்தில் பிரியங்கா காந்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கிவருகிறது. ஆனால் மற்றொரு புறம் பா.ஜனதா கட்சி வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
அமேதி மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்பது பா.ஜனதாவுக்கு தெரியாது. பல ஆண்டுகளாக அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை பா.ஜனதா கட்சியால் ரூ.20 ஆயிரம் கொடுத்து தடுத்துவிட முடியாது. அமேதி மக்கள் தங்களை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார்கள் என பா.ஜனதா கருதுவது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் நேரு-காந்தி குடும்பத்தின் அன்பையும், அரவணைப்பையும் சம்பாதித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார். #Amethi #PriyankaGandhi #BJP
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் போட்டியிடுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.
அந்த தொகுதியில் உள்ள பிரதான்ஸ் கிராமத்தில் பிரியங்கா காந்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கிவருகிறது. ஆனால் மற்றொரு புறம் பா.ஜனதா கட்சி வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
அமேதி மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்பது பா.ஜனதாவுக்கு தெரியாது. பல ஆண்டுகளாக அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை பா.ஜனதா கட்சியால் ரூ.20 ஆயிரம் கொடுத்து தடுத்துவிட முடியாது. அமேதி மக்கள் தங்களை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார்கள் என பா.ஜனதா கருதுவது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் நேரு-காந்தி குடும்பத்தின் அன்பையும், அரவணைப்பையும் சம்பாதித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார். #Amethi #PriyankaGandhi #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X