search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
     
    பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.

    இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு படைவீரர் காயமடைந்தார். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு இண்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #ShopianEncounter
    Next Story
    ×