என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவிந்த் கெஜ்ரிவால் மகன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 96.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
Byமாலை மலர்2 May 2019 10:55 AM GMT (Updated: 2 May 2019 10:55 AM GMT)
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மகன் புல்கீத் கெஜ்ரிவால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். #AravindKejriwal #PulkitKejriwal
புது டெல்லி:
நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இதில் 12ம் வகுப்பு தேர்வில், 12.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கித் கெஜ்ரிவால், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து புல்கீத்துக்கு டெல்லி துணை முதல் மந்திரி மனீஷ் சிசோதயா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இதில் 12ம் வகுப்பு தேர்வில், 12.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான, cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்களுடன் காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கித் கெஜ்ரிவால், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து புல்கீத்துக்கு டெல்லி துணை முதல் மந்திரி மனீஷ் சிசோதயா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது தாயார் சுனிதா கெஜ்ரிவால் கூறுகையில், ‘கடவுளின் அருளாளும், நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தினாலும் புல்கீத் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் பெற்றுள்ளான்’ என கூறினார்.
கடந்த 2014ம் ஆண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா 96% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
இதேபோல் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் மகன் ஜோகர் இரானி 91% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AravindKejriwal #PulkitKejriwal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X