என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திராயன்-2 விண்கலம் செப்.6-ந்தேதி நிலவில் தரை இறங்கும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு
Byமாலை மலர்2 May 2019 10:19 AM GMT (Updated: 2 May 2019 10:19 AM GMT)
நிலாவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 6-ந்தேதி தரை இறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO #Chandrayaan2
பெங்களூர்:
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.
அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.
இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலாவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு அதுவும் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சந்திராயன்-2 விண்கலத்தில் சில மாற்றங்களை செய்ய விஞ்ஞானிகள் கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததால் அந்த திட்டமும் நிறைவேறவில்லை. இதனால் 3-வது முறையாக சந்திராயன்-2 விண்கலம் ஏவும் திட்டம் தடைப்பட்டது.
இந்த நிலையில் சந்திராயன்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந் தேதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும்.
செப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டதாகும்.
இதில் ஆர்பிட்டர் சாதனம் சந்திராயன்-2 விண்கலத்தை சுற்று பாதை மாற்றுவதற்கு உதவி செய்யும். லேண்டர் கருவி நிலாவில் தரை இறங்குவதற்கு உதவியாக இருக்கும். ரோவர் வாகனம் நிலாவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.
சந்திராயன்-1 விண்கலம் திட்டம் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. உலக அளவில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை உறுதிப்படுத்தினார்கள்.
சந்திராயன்-1 விண்கலம் அனுப்பிய 3-டி படங்கள் மிக மிக துல்லியமாக இருந்தன. உலக அளவில் நிலா பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த படங்கள் மிக உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல சந்திராயன்-2 விண்கலம் நிலாவில் உள்ள ஹீலியம்வாயு பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ISRO #Chandrayaan2
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.
அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.
இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலாவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கை கோளின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்திராயன்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந் தேதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும்.
செப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டதாகும்.
இதில் ஆர்பிட்டர் சாதனம் சந்திராயன்-2 விண்கலத்தை சுற்று பாதை மாற்றுவதற்கு உதவி செய்யும். லேண்டர் கருவி நிலாவில் தரை இறங்குவதற்கு உதவியாக இருக்கும். ரோவர் வாகனம் நிலாவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.
சந்திராயன்-1 விண்கலம் திட்டம் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. உலக அளவில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை உறுதிப்படுத்தினார்கள்.
சந்திராயன்-1 விண்கலம் அனுப்பிய 3-டி படங்கள் மிக மிக துல்லியமாக இருந்தன. உலக அளவில் நிலா பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த படங்கள் மிக உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல சந்திராயன்-2 விண்கலம் நிலாவில் உள்ள ஹீலியம்வாயு பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ISRO #Chandrayaan2
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X