என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
Byமாலை மலர்2 May 2019 1:25 AM GMT (Updated: 2 May 2019 1:25 AM GMT)
பிரதமரை திருடன் என கூறிய பஞ்சாப் மந்திரி சித்துவின் பேச்சை கேட்டறிந்த தேர்தல் கமிஷன் சித்துவுக்கு நோட்டீஸ் வழங்கியது. #NavjotSinghSidhu #ElectionCommission #PMModi
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்திருந்தார். இதுபற்றி பா.ஜனதா தொண்டர் தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். சித்துவின் பேச்சை கேட்டறிந்த தேர்தல் கமிஷன் சித்துவுக்கு நோட்டீஸ் வழங்கியது.
அதில், தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரசாரத்தில் எதிரணியினரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. எனவே இந்த புகார் குறித்து 2-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தேர்தல் கமிஷன் இந்த புகாரின் மீது ஒரு முடிவை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், முஸ்லிம் வாக்காளர்கள் பிரதமர் மோடியை தோற்கடிக்க வாக்களிக்க வேண்டும் என்று கூறியதற்காக தேர்தல் கமிஷன் சித்துவுக்கு 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #NavjotSinghSidhu #ElectionCommission #PMModi
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்திருந்தார். இதுபற்றி பா.ஜனதா தொண்டர் தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். சித்துவின் பேச்சை கேட்டறிந்த தேர்தல் கமிஷன் சித்துவுக்கு நோட்டீஸ் வழங்கியது.
அதில், தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரசாரத்தில் எதிரணியினரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. எனவே இந்த புகார் குறித்து 2-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தேர்தல் கமிஷன் இந்த புகாரின் மீது ஒரு முடிவை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், முஸ்லிம் வாக்காளர்கள் பிரதமர் மோடியை தோற்கடிக்க வாக்களிக்க வேண்டும் என்று கூறியதற்காக தேர்தல் கமிஷன் சித்துவுக்கு 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #NavjotSinghSidhu #ElectionCommission #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X