என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்2 May 2019 12:59 AM GMT (Updated: 2 May 2019 12:59 AM GMT)
தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகரி:
தெலுங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 25-ந்தேதி பயிற்சி இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை.
இதனால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, ஹாஜிபூர் கிராமம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் மாணவி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அந்த கிணற்றின் உரிமையாளரான அதே கிராமத்தை சேர்ந்த மர்ரி சீனிவாச ரெட்டி என்கிற அனுமந்து (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மாணவியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஹாஜிபூர் கிராமத்துக்கு சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவிகள் அங்கிருந்து பள்ளிகளுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை சீனிவாச ரெட்டி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
மெக்கானிக்கான அவர், லிப்ட் கொடுப்பதாக கூறி மாணவியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் தனக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தான் சிக்கிவிடுவோமோ என்கிற பயத்தில் மாணவியை கொலை செய்த அனுமந்து, கிணற்றில் உடலை வீசிவிட்டு வீட்டுக்கு சென்றார். சீனிவாச ரெட்டி இதேபோல் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச்சென்று மேலும், 2 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொலை செய்து, அவர்களின் உடல்களை பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அனுமந்துவின் வீட்டை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்தனர். மேலும், அவரை தூக்கில் போட வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 25-ந்தேதி பயிற்சி இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை.
இதனால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, ஹாஜிபூர் கிராமம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் மாணவி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அந்த கிணற்றின் உரிமையாளரான அதே கிராமத்தை சேர்ந்த மர்ரி சீனிவாச ரெட்டி என்கிற அனுமந்து (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மாணவியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஹாஜிபூர் கிராமத்துக்கு சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவிகள் அங்கிருந்து பள்ளிகளுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை சீனிவாச ரெட்டி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
மெக்கானிக்கான அவர், லிப்ட் கொடுப்பதாக கூறி மாணவியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் தனக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தான் சிக்கிவிடுவோமோ என்கிற பயத்தில் மாணவியை கொலை செய்த அனுமந்து, கிணற்றில் உடலை வீசிவிட்டு வீட்டுக்கு சென்றார். சீனிவாச ரெட்டி இதேபோல் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச்சென்று மேலும், 2 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொலை செய்து, அவர்களின் உடல்களை பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அனுமந்துவின் வீட்டை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்தனர். மேலும், அவரை தூக்கில் போட வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X