search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் போலீஸ் வாகனம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் - 16 போலீசார் பலி
    X

    மகாராஷ்டிராவில் போலீஸ் வாகனம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் - 16 போலீசார் பலி

    மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸ் வாகனம் மீது வெடி குண்டுகளை வீசி நக்சலைட்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 16 போலீசார் உயிரிழந்தனர். #IEDblast #GadchiroliNaxalattack
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று அதிகாலை திடீரென்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைக்கும் பணிகளை செய்யும்  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 25 வாகனங்களை கும்பலாக வந்த நக்சலைட்டுகள் தீயிட்டு கொளுத்தினர்.

    மேலும், பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது வெடி  குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 16 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.



    அங்கு நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

    நக்சலைட்டுகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #IEDblast #GadchiroliNaxalattack
    Next Story
    ×