என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து
Byமாலை மலர்30 April 2019 8:21 PM GMT (Updated: 30 April 2019 8:21 PM GMT)
டெல்லி சாஸ்திரி பவனில் அமைச்சக நிறுவனங்கள் இயங்கி வரும் 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. #ShastriBhawan #FireAccident
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய அரசின் ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு அமைச்சக நிறுவனங்கள் இயங்கி வரும் இந்த 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது சில நிமிடங்களில் மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் 8 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பொருட்சேதம் குறித்தும் எதுவும் தெரியாத நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த தீ விபத்து தொடர்பாக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தை மோதல் மூண்டுள்ளது. ரபேல் வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை அழிப்பதற்காக இந்த தீ விபத்தை நடத்தி இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை பா.ஜனதா மறுத்து உள்ளது. #ShastriBhawan #FireAccident
டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய அரசின் ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு அமைச்சக நிறுவனங்கள் இயங்கி வரும் இந்த 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது சில நிமிடங்களில் மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் 8 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பொருட்சேதம் குறித்தும் எதுவும் தெரியாத நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த தீ விபத்து தொடர்பாக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தை மோதல் மூண்டுள்ளது. ரபேல் வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை அழிப்பதற்காக இந்த தீ விபத்தை நடத்தி இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை பா.ஜனதா மறுத்து உள்ளது. #ShastriBhawan #FireAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X