search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே மத்திய மந்திரி கார் மீது தாக்குதல்
    X

    மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே மத்திய மந்திரி கார் மீது தாக்குதல்

    மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. #BabulSupriyo #Asansolpolls
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.



    மேலும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. #BabulSupriyo #Asansolpolls
    Next Story
    ×