search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலை ஏற்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற வியாபாரி
    X

    கள்ளக்காதலை ஏற்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற வியாபாரி

    கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மனைவி அமலா (வயது 37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள பள்ளிவாசலுக்கு நாசர் தொழுகைக்காக சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பென்னி மற்றும் அமலா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய நாசர், தனது மனைவி உடல் சிதறி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து சுல்தான்பத்தேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- நாசரின் மனைவி அமலா மீது பென்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதை அவர் பலமுறை அமலாவிடம் கூறி உள்ளார். ஆனால் அமலா ஏற்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பென்னி நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். நேற்று மதியம் நாசர் பள்ளி வாசலுக்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த அமலாவை சந்திக்க வெடிகுண்டுடன் பென்னி சென்றார். அப்போது தனது காதலை வெளிப்படுத்தியும் அவர் ஏற்கவில்லை. உடனே தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்க செய்துள்ளார். இதில் 2 பேரும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×