search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமானது - ராகுல் காந்தி
    X

    பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமானது - ராகுல் காந்தி

    உ.பி.யின் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என குற்றம்சாட்டினார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி  பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை தந்தார் என சொல்ல முடியுமா?  காரணம், 45 ஆண்டில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது.



    கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.

    வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை மற்றும் 15 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்து அவர் பேசுவதில்லை. தனக்கு எழுதி தருபவற்றை பிராம்டரை பார்த்து படிக்க மட்டும் செய்கிறார். எது பேச வேண்டும் என எழுதி தருவதை மட்டுமே படிக்கிறார். காலம் அதனை மாற்றும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    Next Story
    ×