search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் தவறு செய்திருந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடக்கும் - மோடி பேச்சு
    X

    நான் தவறு செய்திருந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடக்கும் - மோடி பேச்சு

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்; நான் தவறு செய்திருந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடக்கும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #raidmyhouse #Modi
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்மாநில முதல் மந்திரி கமல்நாத் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சியினர் தன்மீது குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர்கள் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டதால் அங்கு சோதனைகள் நடந்தன. என்மீது தவறிருப்பதாக தெரியவந்தாலும் அவர்கள் சோதனை நடத்துவார்கள்.

    டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ஒரு கட்சி (காங்கிரஸ்) அலுவலகத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு இயக்குனரகம் சமீபத்தில் 20 கோடி ரூபாய் பதுக்கல் பணத்தை கண்டுபிடித்தது. ஆனால், இதை எல்லாம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் கதறுகின்றனர் எனவும் மோடி குறிப்பிட்டார்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களுக்காக நாங்கள் அனுப்பும் பணத்தை எல்லாம் இங்குள்ள மாநில அரசு சுரண்டி, டெல்லி துக்ளக் சாலையில் உள்ள தங்கள் கட்சியின் தலைமைக்கு அனுப்பி விடுகிறது. இப்படி திருட்டுத்தனம் செய்பவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். என்மீது தவறிருப்பதாக தெரியவந்தால் என் வீட்டிலும் அவர்கள் சோதனை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். #raidmyhouse #Modi
    Next Story
    ×