என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு- டெல்லிக்கே திரும்பியது
Byமாலை மலர்26 April 2019 5:42 AM GMT (Updated: 26 April 2019 5:42 AM GMT)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லிக்கே விமானம் திரும்பி வந்தது. #Rahul #RahulCampaign
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார்.
இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது.
இத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சமஸ்திபூர், பலசோர் மற்றும் சங்கம்னர் பிரசாரம் பின்னர் நடைபெறும் என கூறியுள்ளார். சிரமத்திற்கு வருந்துவதாகவும் ராகுல் கூறியுள்ளார். #Rahul #RahulCampaign
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X