search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்
    X

    தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. #RanjanGogoi #SupremeCourt #AKPatnaik
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
     
    ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன என தெரிவித்தார்.

    இதற்கிடையே பாலியல் வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாக வக்கீல் உத்சவ் பெய்ன்ஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1½ கோடி வரை தருவதாக சிலர் முயன்றுள்ளனர் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும்  என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.

    மேலும், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழுவுக்கு  சி.பி.ஐ., உளவுத்துறை, டெல்லி போலீசார் ஆகியோர்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #RanjanGogoi #SupremeCourt #AKPatnaik
    Next Story
    ×