search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் மம்தா விலை கொடுத்து வாங்கி விடுவார் - மோடி காட்டம்
    X

    பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் மம்தா விலை கொடுத்து வாங்கி விடுவார் - மோடி காட்டம்

    இந்திய பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் ஊழல் செய்து குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து மம்தா பானர்ஜி பிரதமர் நாற்காலியை விலைக்கு வாங்கி விடுவார் என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PMModi #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக  பாஜக சார்பில் அன்சோல் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட் பேசியதாவது:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் வழிப்பறி மூலம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அவர் முயற்சிக்க திட்டமிட்டுள்ளார். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.



    மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை மம்தா பானர்ஜி தங்களது கட்சிக்காரர்களாக மாற்றியுள்ளார். மேலும், வெளிநாட்டுக்காரர்களை வைத்து தங்களது கட்சிக்கு பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் அவமானகரமானது.

    இந்திய பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் ஊழல் செய்து குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து மம்தா பானர்ஜி பிரதமர் நாற்காலியை விலைக்கு வாங்கி விடுவார் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #PMModi #MamataBanerjee
    Next Story
    ×