search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது - ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து
    X

    காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது - ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து

    காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் தெரிவிட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் பற்றி தனது பிரசாரத்துக்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தது குறித்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும்போது, “இது ராகுல் காந்தியின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த அடி. பொதுவாழ்வில் மக்கள் சில நேரங்களில் உண்மையற்றதை சொல்வார்கள். ஆனால் அதையே திரும்பத் திரும்ப சொல்வது தான் வருத்தத்திற்குரியது. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர் பொய்யை மட்டுமே நம்பியுள்ளார் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தான் கூறியது பொய் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் அர்த்தமாகிறது” என்று கூறினார்.

    வழக்கு தொடுத்த மீனாட்சி லேகி எம்.பி. கூறும்போது, “ராகுல் காந்தி சொன்னது பொய் என்பது வெளியானதில் எனக்கு திருப்தி. ஆனாலும் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.  #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    Next Story
    ×