என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து போட்டியிடுவார்: பியூஷ் கோயல்
Byமாலை மலர்21 April 2019 4:17 AM GMT (Updated: 21 April 2019 4:18 AM GMT)
இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்த பின்னர், ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து போட்டியிடுவார் என் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், ‘‘அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ராகுலை வீழ்த்துவார். வயநாட்டிலும் ராகுல் தோல்வியை தழுவுவார். இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார்’’ என கூறியுள்ளார்.
‘‘ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என கூறுகிறார். அவர் அச்சத்துடன் உள்ளார். ஜனநாயகத்தில், தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது’’ என்றும் கூறியுள்ளார்.
கேரள வயநாட்டில் இம்மாத தொடக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேசிய ராகுல், ‘‘சாரிகளுக்கு எதிராக விமர்சித்து எதனையும் பேசப்போவதில்லை. நான் இங்கு ஒற்றுமைக்கான செய்திளை அளிக்கவே வந்துள்ளேன்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், ‘‘அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ராகுலை வீழ்த்துவார். வயநாட்டிலும் ராகுல் தோல்வியை தழுவுவார். இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார்’’ என கூறியுள்ளார்.
‘‘ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என கூறுகிறார். அவர் அச்சத்துடன் உள்ளார். ஜனநாயகத்தில், தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது’’ என்றும் கூறியுள்ளார்.
கேரள வயநாட்டில் இம்மாத தொடக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேசிய ராகுல், ‘‘சாரிகளுக்கு எதிராக விமர்சித்து எதனையும் பேசப்போவதில்லை. நான் இங்கு ஒற்றுமைக்கான செய்திளை அளிக்கவே வந்துள்ளேன்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X