search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி
    X

    ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி

    மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×