search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
    X

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #TamilNaduRains #Rainfall #IMD
    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பு வருமாறு:-

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் 8 செமீ, கன்னியாகுமரி கோதையாறில் 7 செமீ, கொடைக்கானலில் 6 செமீ, மஞ்சளாறில் 5 செமீ, வேடசந்தூரில் 4 செமீ  மழை பதிவாகி உள்ளது. #TamilNaduRains #Rainfall #IMD
    Next Story
    ×