search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் பிரதமர் ஆனால் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்- தேவேகவுடா
    X

    ராகுல் பிரதமர் ஆனால் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்- தேவேகவுடா

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆனால், அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Rahul
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கி உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் பாராளுமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனது எதிர்கால திட்டம் குறித்தும் தேவேகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எந்த லட்சியமும் இல்லை. ஆனால், எப்போதும் கூறுவது என்னவென்றால், நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை.



    நான் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக குமாரசாமி கூறியது பற்றி பெரிதுபடுத்தவில்லை. எங்கே மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பதுதான் என் கவலை. இதை பிரதமரின் முகத்தை பார்த்து சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் உள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வந்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். பிரதமர் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #DeveGowda #Rahul
    Next Story
    ×