search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாட்டர்கம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கர்வாதீ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். #MilitantKilled
    Next Story
    ×