search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு பிரியங்கா பிரசாரம்
    X

    வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு பிரியங்கா பிரசாரம்

    வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு வருகிற 21-ந் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்த பிறகு ராகுலும், பிரியங்காவும் சேர்ந்து ரோடு ஷோ நடத்தி னார்கள். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் மட்டும் வந்து ஒருநாள் சூறாவளி பிரசாரம் செய்தார்.

    அவர் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் வயநாடு தொகுதிக்கு வர இயலவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் பிரியங்கா வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 2 நாள் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

     


    பிரியங்கா இன்று உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மே 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள அமேதி தொகுதியில் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று பிற்பகல் அவர் கான்பூரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அந்த ரோடு ஷோ முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற இருக்கிறது. ரோடு ஷோ முடிந்ததும் பூல்பக் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு லக்னோ சென்று டெல்லிக்கு செல்கிறார்.

    மீண்டும் 23-ந்தேதி அமேதிக்கு செல்ல பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    வயநாடு தொகுதிக்கு பிரியங்கா நாளை (சனிக்கிழமை) வருகிறார். வயநாட்டில் அவர் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற உள்ளது.

    அதன் பிறகு 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா பேசுகிறார். நாளை இரவு அவர் வயநாடு தொகுதியில் தங்குகிறார். நாளை மறுநாளும் அவர் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அன்று இரவு அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    Next Story
    ×