என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி ஹெலிகாப்டரை சோதித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்டு- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Byமாலை மலர்18 April 2019 7:04 AM GMT (Updated: 18 April 2019 7:04 AM GMT)
ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #PMModi #ElectionCommission
புதுடெல்லி:
ஒடிசாவில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் பிரதமர் மோடி புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து ஒரு நபர் விசாரணை குழுவை தேர்தல் கமிஷன் ஒடிசாவுக்கு அனுப்பியது. விசாரணையின் முடிவில் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறும் பிரதமர் போன்றோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்களித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல்கமிஷனின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தவாரம் சுந்தர்கர் பகுதியில் பிரசாரம் செய்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சஸ்பெண்டு ஆன தேர்தல் அதிகாரி முகமது மோஷின் கர்நாடகாவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேர்தல் கண்காணிப்பாளராக ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். #PMModi #ElectionCommission
ஒடிசாவில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் பிரதமர் மோடி புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து ஒரு நபர் விசாரணை குழுவை தேர்தல் கமிஷன் ஒடிசாவுக்கு அனுப்பியது. விசாரணையின் முடிவில் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறும் பிரதமர் போன்றோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்களித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல்கமிஷனின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தவாரம் சுந்தர்கர் பகுதியில் பிரசாரம் செய்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சஸ்பெண்டு ஆன தேர்தல் அதிகாரி முகமது மோஷின் கர்நாடகாவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேர்தல் கண்காணிப்பாளராக ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். #PMModi #ElectionCommission
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X