என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்கிரஸின் சூழ்ச்சி - நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்17 April 2019 4:34 AM GMT (Updated: 17 April 2019 4:34 AM GMT)
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
புது டெல்லி:
இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து திட்டம் தீட்டி வருகின்றனர்.
அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து திட்டம் தீட்டி வருகின்றனர்.
அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X