என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 4 ஊழியர்கள் இடைநீக்கம்
Byமாலை மலர்17 April 2019 1:13 AM GMT (Updated: 17 April 2019 1:13 AM GMT)
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரெயில் நிலையத்தில் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 4 ஊழியர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். #RailwayTicket #Modi #EmployeesSuspended
பாரபங்கி:
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரெயில் நிலையத்தில், கடந்த 14-ந்தேதி, பிரதமர் மோடி புகைப்படத்துடன், மத்திய அரசு வீட்டு வசதி திட்ட விளம்பரம் பொறிக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட கூடுதல் கலெக்டர் சந்தீப் குமார் குப்தா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து 10 நாட்கள்வரை, பிரதமர் படத்துடன் கூடிய டிக்கெட்டுகளை வழங்கி வந்ததாக தெரியவந்தது. தவறுதலாக அந்த டிக்கெட் சுருள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறி சமாளித்தனர். இருப்பினும், ரெயில்வே உயர் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, 4 ஊழியர்களை இடைநீக்கம் செய்தனர்.
2 பேர், முன்பதிவு குமாஸ்தாக்கள் ஆவர். ஒருவர், தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர், இன்னொருவர் வணிக ஆய்வாளர் ஆவர்.
#RailwayTicket #Modi #EmployeesSuspended
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரெயில் நிலையத்தில், கடந்த 14-ந்தேதி, பிரதமர் மோடி புகைப்படத்துடன், மத்திய அரசு வீட்டு வசதி திட்ட விளம்பரம் பொறிக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட கூடுதல் கலெக்டர் சந்தீப் குமார் குப்தா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து 10 நாட்கள்வரை, பிரதமர் படத்துடன் கூடிய டிக்கெட்டுகளை வழங்கி வந்ததாக தெரியவந்தது. தவறுதலாக அந்த டிக்கெட் சுருள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறி சமாளித்தனர். இருப்பினும், ரெயில்வே உயர் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, 4 ஊழியர்களை இடைநீக்கம் செய்தனர்.
2 பேர், முன்பதிவு குமாஸ்தாக்கள் ஆவர். ஒருவர், தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர், இன்னொருவர் வணிக ஆய்வாளர் ஆவர்.
#RailwayTicket #Modi #EmployeesSuspended
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X