என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்
Byமாலை மலர்15 April 2019 10:25 PM GMT (Updated: 15 April 2019 10:25 PM GMT)
பாலகோட் தாக்குதலின்போது ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும் என்று விமானப்படை தளபதி தனோவா கூறினார். #RafaleFighter #Balakot #Dhanoa
புதுடெல்லி:
காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.
நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.
மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RafaleFighter #Balakot #Dhanoa
காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாலகோட் தாக்குதலில் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் மூலம் மிகச்சரியாக இலக்கு தாக்கப்பட்டது. மிக்-21, பைசன்ஸ் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை நாம் மேம்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.
நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.
மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RafaleFighter #Balakot #Dhanoa
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X